செய்திகள்
தற்கொலை

ராசிபுரம் அருகே திருமணமான 8 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-06-16 11:11 GMT   |   Update On 2021-06-16 11:11 GMT
ராசிபுரம் அருகே திருமணமான 8 மாதங்களில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள கட்டனாச்சம்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் எதிரில் சைக்கிள் ஸ்டாண்ட் நடத்தி வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த சத்தியா (32) என்ற பெண்ணுக்கும் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் சத்தியா நேற்று அவரது வீட்டில் சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து ராசிபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சத்தியா குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி எட்டு மாதங்களில் சத்தியா தற்கொலை செய்து கொண்டதால் நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News