செய்திகள்
கைது

எட்டயபுரம் அருகே மாமனார்-மாமியார் மீது தாக்குதல்- தொழிலாளி கைது

Published On 2021-03-05 22:06 GMT   |   Update On 2021-03-05 22:06 GMT
எட்டயபுரம் அருகே அரிவாள்மனையால் மாமனார் மற்றும் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எட்டயபுரம்:

எட்டயபுரம் அருகே உள்ள மாசார்பட்டி மேற்கு கோடாங்கி பட்டியை சேர்ந்த சந்திரசேகர் மகன் மணிகண்டன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வருகிறது. இவர் தினமும் மது குடித்துவிட்டு, மனைவி சுப்புலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். 

இதுகுறித்து சுப்புலட்சுமி தனது பெற்றோரான மதுரை மாவட்டம் மேலவெளிவீதியைச் சேர்ந்த பாண்டி (57) மற்றும் பஞ்சவர்ணம் (42) ஆகியோரிடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து நேற்று முன்தினம் மணிகண்டனிடம் பேசுவதற்காக பாண்டியும், பஞ்சவர்ணமும் வந்துள்ளனர். அவர்கள் சமரசம் பேசிக் கொண்டிருந்தபோது, ஆத்திரமடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த அரிவாள்மனையால் மாமனார் மற்றும் மாமியாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். காயமடைந்த 2 பேரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாசார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ரோஸ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News