செய்திகள்
மரணம்

குடியாத்தம் அருகே ரெயிலில் அடிபட்டு வியாபாரி பலி

Published On 2021-02-23 10:36 GMT   |   Update On 2021-02-23 10:36 GMT
குடியாத்தம் அருகே ரெயிலில் அடிபட்டு வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

குடியாத்தம் அடுத்த கல்லூர் மாதவன் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 46). இவர் குடியாத்தம் பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் கடையை திறப்பதற்காக வீட்டில் இருந்து கடைக்கு சென்றார். அப்போது குடியாத்தம்- வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்தவழியாக வந்த ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News