செய்திகள்
தற்கொலை

கம்ப்யூட்டர் பயிற்சி மைய உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-10-08 12:07 GMT   |   Update On 2021-10-08 12:07 GMT
கம்ப்யூட்டர் பயிற்சி மைய உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலை பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாஷியம் (வயது 43). இவர் மறைமலைநகரில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுந்தர பாஷியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News