செய்திகள்
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் பெயர்- மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்கிறது பாஜக

Published On 2021-10-30 10:44 GMT   |   Update On 2021-10-30 10:44 GMT
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும் என அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரை:

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பசும்பொன் தேவர் குரு பூஜையில் கலந்து கொள்வதற்காக மதுரை வந்தார்.

பசும்பொன் செல்லும் வழியில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், “பசும்பொன் தேவர் திருமகனார் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றவர். அரசியலையும், ஆன்மீகத்தையும் 2 கண்களாக பாவித்தவர். நாகரீகமான முறையில் அரசியல் செய்தவர்.


மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்தியாவே போற்றும் ஒப்பற்ற தலைவருக்கு இந்த நேரத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

மூத்த நிர்வாகிகள் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதன் பிறகு அண்ணாமலை மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.


Tags:    

Similar News