செய்திகள்
கோப்புபடம்

ஆரணி அருகே தலையில் மூட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி பலி

Published On 2020-10-24 08:58 GMT   |   Update On 2020-10-24 08:58 GMT
ஆரணி அருகே தலையில் மூட்டைகள் சரிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விருப்பாட்சி (வயது 45), கூலி தொழிலாளி. இவருக்கு தேவிகா என்ற மனைவியும் ரஞ்சித் என்ற மகனும் ரம்யா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விண்ணமங்கலம் கிராமத்தில் உள்ள வெங்கடேசன் என்பவரின் உரக்கடைக்கு லாரியில் வந்த உர மூட்டைகளை விருப்பாட்சி இறக்கி கொண்டிருந்தார். அப்போது கடையின் மேல் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் திடீரென கீழே சரிந்தது. மூட்டைகள் விருப்பாட்சியின் தலையில் விழுந்ததில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News