செய்திகள்
தற்கொலை

ஒரத்தநாடு அருகே வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2021-05-01 10:00 GMT   |   Update On 2021-05-01 10:00 GMT
ஒரத்தநாடு அருகே வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரத்தநாடு:

ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு மேலையூர் மழவராயர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்( 30). இவருக்கு கடந்த ஒரு வருட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். பலமுறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று வந்தும் அவரது முன்னேற்றமும் இல்லை என்பதால் மன விரக்தியில் இருந்த சுப்பிரமணியன். எலி மருந்தை சாப்பிட்டுள்ளார்.

மிகவும் ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர். சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார் .

இதுகுறித்து சுப்பிரமணியனின் மனைவி பவ்யா கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News