செய்திகள்
கோப்புபடம்

கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் மலைப்பகுதியில் போராட்டம்

Published On 2021-02-19 12:03 GMT   |   Update On 2021-02-19 12:03 GMT
வத்திராயிருப்பு அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ்மக்கள் மலைப்பகுதியில் குடியேறினர்.
வத்திராயிருப்பு:

வத்திராயிருப்பு அருகே உள்ள ராம்நகர் பகுதியில் 65-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்குச் செல்வதற்கு தார் சாலை வேண்டும்.

பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் சதுரகிரி மலை பாதையில் கடைகள் அமைக்கவும், வனப்பகுதியில் தங்களது ஆடு, மாடுகளை மேய்க்க அனுமதி கோரியும் நேற்று பார்ப்பனத் அம்மன் கோவில் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வத்திராயிருப்பு தாசில்தார் அன்னம்மாள், இன்ஸ்பெக்டர் சுபக்குமார், வனச்சரகர் மகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மலைப்பகுதியில் குடியேறிய மலைவாழ் மக்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

இதையடுத்து கோரிக்கைகள் அதிகாரிகளிடம் தெரிவித்து அனுமதி வாங்கி தரப்படும் என அவர்கள் கூறினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மலைவாழ் மக்கள் வீடுகளுக்கு திரும்பினர்.
Tags:    

Similar News