செய்திகள்
தற்கொலை

களக்காட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2020-11-08 14:16 GMT   |   Update On 2020-11-08 14:16 GMT
களக்காட்டில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
களக்காடு:

களக்காடு மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தாரிக் மன்சூர். வள்ளியூர் சேனையர் தெருவைச் சேர்ந்தவர் அருள்வேல் ராமசுந்தரம் மகள் தருனேசுவரி தேவி (வயது 21). இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வள்ளியூரில் உள்ள ஜவுளி கடையில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்கள் களக்காட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார். திருமணத்துக்கு பிறகு தருனேசுவரி தேவி தனது பெயரை ரிகானா என மாற்றி கொண்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தருனேசுவரி தேவி தன்னுடைய தாயார் இசக்கியம்மாளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது கணவருக்கு சரியான வேலை இல்லாததால் பண உதவி கேட்டார். ஆனால் தாயார் தன்னிடம் பணம் இல்லை, இங்கு வந்து சில நாட்கள் தங்கி செல்லுங்கள் என்று கூறினார்.

இந்த நிலையில் தாரிக் மன்சூருக்கும், தருனேசுவரி தேவிக்கும் இடையே பணப்பிரச்சினை தொடர்பாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த தருனேசுவரி தேவி சம்பவத்தன்று அதிகாலையில் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், களக்காடு போலீசார் விரைந்து சென்று, இறந்த தருனேசுவரிதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 3 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்ததால், சேரன்மாதேவி உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News