ஆன்மிகம்
சோழவந்தான் ரெங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

சோழவந்தான் ரெங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2020-11-13 06:17 GMT   |   Update On 2020-11-13 06:17 GMT
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள தெப்பத்துப்பட்டி கிராமத்தில் ரெங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் அடுத்துள்ள தெப்பத்துப்பட்டி கிராமத்தில் ரெங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி 3 நாள் யாக வேள்வி பூஜை நடைபெற்றது. 3-ம் நாள் காலை சிவாச்சாரியார்கள் மேளதாளத்துடன் புனிதநீர் எடுத்து கோவிலை வலம் வந்தனர்.

கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் ரெங்கநாத பெருமாள் உள்பட பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்பட 21 அபிஷேகங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News