செய்திகள்
மரணம்

பவானி அருகே டையிங் கம்பெனி தொழிலாளி திடீர் மரணம்

Published On 2019-11-04 10:29 GMT   |   Update On 2019-11-04 10:29 GMT
பவானி அருகே டையிங் கம்பெனி தொழிலாளி திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானி:

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 57). இவர் கடந்த 3 நாட்களாக காடையாம்பட்டி பகுதியில் உள்ள தனியார் டையிங் கம்பெனியில் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார்

இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5, மணி அளவில் நெஞ்சு வலிப்பதாக அருகில் வேலை செய்பவர்களிடம் தெரிவித்துள்ளார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் குறித்து பவானி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரஸ்வதி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News