செய்திகள்
கோப்பு படம்

துணி எடுப்பது போல் நடித்து கல்லா பெட்டியில் வைத்திருந்த பணத்தை திருடிய வாலிபர்கள்

Published On 2020-01-14 10:13 GMT   |   Update On 2020-01-14 10:13 GMT
கோவை போத்தனூரில் துணி எடுப்பது போல் நடித்து ரூ.17 ஆயிரம் பணத்தை திருடி சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கோவை:

கோவை போத்தனூர் கடை வீதியை சேர்ந்தவர் ராஜசேகர் (53). இவர் துணிக்கடை வைத்துள்ளார். நேற்று இவரது கடைக்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் துணிகளை எடுத்து தருமாறு ராஜசேகரிடம் கூறினார்கள். அவரும் துணிகளை எடுத்து போட்டார். அப்போது ராஜசேகர் கவனத்தை திசை திருப்பிய 2 வாலிபர்களும் அங்கிருந்த கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ. 17 ஆயிரத்தை திருடி கொண்டு தப்பி சென்று விட்டனர். போத்தனூர் கார்மல் நகரை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி சைலஜா (53). இவர்கள் இருவரும் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென சைலஜா கழுத்தில் அணிந்து இருந்த மூன்றரை பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News