தோஷ பரிகாரங்கள்
நத்தம் மாரியம்மன்

பக்தர்களின் குறைகளை தீர்க்கும் நத்தம் மாரியம்மன்

Published On 2022-03-23 01:28 GMT   |   Update On 2022-03-23 01:28 GMT
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி ஈர உடைகளோடு வந்து மாரியம்மன் கோவில் முன்பு வணங்கி குழந்தை வரம் கேட்பது இன்றும் நடைமுறையில் உள்ளது.
நோய்களை தீர்க்கும் தீர்த்தம்

நத்தம் மாரியம்மன் கோவில், வெளிப்பிரகாரம் வரை கருங்கற்களால் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் 22 கல்தூண்கள் நிலைநிறுத்தப்பட்டு, மேல்தளம் பட்டியல் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோபுரத்திலும், பிரகாரத்தை சுற்றிலும் கலைநயம் மிகுந்த சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பக்தர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளன. அபிஷேக மூலிகை தீர்த்தம் நத்தம் மாரியம்மனின் அருளால் பலருடைய துன்பங்களையும் போக்கி வருகிறது. அத்துடன் ‘அம்மை’ தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாரியம்மனின் அபிஷேக மூலிகை தீர்த்தத்தை அளித்தால் 3 நாளில் குணமாகும். இது போல் மேலும் பல நோய்களை போக்கும் தீர்த்தமாகவும் மாரியம்மன் கோவில் அபிஷேக மூலிகை தீர்த்தம் விளங்குகிறது.

கரும்பு தொட்டில் கட்டி நேர்த்திக்கடன்

நத்தம் மாரியம்மன் நித்தம் அருள்பாலிக்கும் முத்திரை பதிக்கும் தெய்வமாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் புனித நீராடி ஈர உடைகளோடு வந்து மாரியம்மன் கோவில் முன்பு வணங்கி குழந்தை வரம் கேட்பது இன்றும் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு குழந்தை வரம் பெற்ற தம்பதிகள் கரும்பு தொட்டில் கட்டி அதில் குழந்தையை படுக்க வைத்து மாரியம்மன் கோவிலை சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். அதன்படி இந்த மாசி பெருந்திருவிழாவில் தம்பதிகள் பலர் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

வேப்பமர கட்டைகள் காணிக்கை

நத்தம் மாரியம்மனின் அருள் ஆற்றல் எண்ணிலடங்காதவை. பக்தர்களுக்கு தாயாக இருந்து அரவணைக்கும் அவள் கருணைக்கு எல்லையே இல்லை. மாரியம்மா என்று மனம் உருகி வேண்டுவோருக்கு அவள் அருள் கரத்தை நீட்ட தவறுவதில்லை. வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள், துயரங்கள், நோய் நொடிகள் நீங்க பெற்றவர்கள் தங்களது நேர்த்திக்கடனை பல்வேறு வகைகளில் நிறைவேற்றி வருகிறார்கள். அதன்படி ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறி யதற்காக பூக்குழி அமையும் தளத்தில் வேப்பமர கட்டைகளை காணிக்கையாக செலுத்தினர். இதுபோல பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Tags:    

Similar News