செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கொடுத்து திருவாரூர் மகிளா கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
நன்னிலம்:
நன்னிலம் அடுத்துள்ள சற்குணேஸ்வரர் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது பெண் குழந்தைக்கு, கடந்த 2019-ம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்த, அதே ஊரை சேர்ந்த மாதா கோயில் தெரு, ராஜா மகன் ரஞ்சித் மீது, பெண் குழந்தையின் தாயார், ஜெயமேரி நன்னிலம் போலீசில் புகார் தெரிவித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர், திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில், வழக்கு நடத்தி வந்தனர்.
வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, ரஞ்சித்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6000 அபதாரமும் விதிக்கப்பட்டது.