செய்திகள்
வாடகை வீட்டுக்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை தராததால் முதியவர் தற்கொலை
கோவையில் வாடகை வீட்டுக்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை தராததால் மனவேதனை அடைந்த முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
கோவை கணுவாய் அம்மன் நகரை சேர்ந்தவர் எபிநேசர் (வயது 61). இவர்களது 2-வது மகள் அருகில் வாடகைக்கு குடியிருந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து விட்டு நெல்லைக்கு சென்றுவிட்டார். வீட்டுக்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை எபிநேகர் கேட்க சென்றார். அப்போது வீட்டின் உரிமையாளர் உங்களிடம் பணம் தரமுடியாது. உங்கள் மகள் வந்தால் தருகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த எபிநேசர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பெரியநாயக்கன்பாளைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொள்ளாச்சி சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (37). பூண்டு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவியின் இழப்பை தாங்கமுடியாத கார்த்திகேயன் தொடர்ந்து சோகத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் சாணிப்பவுடர் கலந்து குடித்தார்.
மயங்கி கிடந்த அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிசிசை பலனின்றி கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை கணுவாய் அம்மன் நகரை சேர்ந்தவர் எபிநேசர் (வயது 61). இவர்களது 2-வது மகள் அருகில் வாடகைக்கு குடியிருந்தார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து விட்டு நெல்லைக்கு சென்றுவிட்டார். வீட்டுக்கு கொடுத்த அட்வான்ஸ் பணத்தை எபிநேகர் கேட்க சென்றார். அப்போது வீட்டின் உரிமையாளர் உங்களிடம் பணம் தரமுடியாது. உங்கள் மகள் வந்தால் தருகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த எபிநேசர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பெரியநாயக்கன்பாளைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பொள்ளாச்சி சூளேஸ்வரன் பட்டியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (37). பூண்டு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவியின் இழப்பை தாங்கமுடியாத கார்த்திகேயன் தொடர்ந்து சோகத்தில் இருந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் சாணிப்பவுடர் கலந்து குடித்தார்.
மயங்கி கிடந்த அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிசிசை பலனின்றி கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.