செய்திகள்
பணியிடை நீக்கம்

கொள்முதல் நிலையத்தில் முறைகேடு- பட்டியல் எழுத்தர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்

Published On 2020-10-21 10:26 GMT   |   Update On 2020-10-21 10:26 GMT
திருவாரூர் மாவட்டத்தில் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு தொடர்பாக பட்டியல் எழுத்தர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் ஆனந்த் உத்தரவிட்டார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மன்னார்குடி தாலுகா கண்ணாரபேட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு துறையினர் ஆய்வின் போது கண்டறியப்பட்ட முறைகேடுகள் தொடர்பாக கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் மற்றும் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் குடவாசல் தாலுகா கூந்தலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் தொடர்பாக விவசாயியிடமிருந்து வரப்பெற்ற புகார் மனுவின் அடிப்படையில் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர் மற்றும் உதவுபவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் உரிய ஆவணங்களை பெற்று எவ்வித புகாருக்கும் இடமின்றி கொள்முதல் செய்திட வேண்டும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News