செய்திகள்

பெரியகுளம் அருகே மிரட்டி பணம் பறித்த 2 பேர் கைது

Published On 2019-05-11 10:28 GMT   |   Update On 2019-05-11 10:28 GMT
பெரியகுளம் அருகே மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி:

பெரியகுளம் அருகே உள்ள அன்னஞ்சி மேலத்தெருவை சேர்ந்தவர் குமார் (வயது43). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பெரியகுளம் தென்கரை சாலையில் நடந்து சென்றார்.

அப்போது அங்கு வந்த வடுகப்பட்டி வள்ளுவர் தெருவை சேர்ந்த வேல்முருகன் (24) என்பவர் உள்ளிட்ட 2 பேர் குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர்.

இதனால் குமார் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வேல்முருகன் உள்ளிட்ட 2 பேரையும் மடக்கி பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிந்து வேல்முருகன் உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News