செய்திகள்
பாஜக தேர்தல் பிரசாரம்

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் - முதல்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு

Published On 2019-11-28 15:59 GMT   |   Update On 2019-11-28 15:59 GMT
ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. நவம்பர் 30, டிசம்பர் 7, 12,16 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் 23ம்  தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்  கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

ஜார்க்கண்டில் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதில் 13 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் 37 லட்சத்து 83 ஆயிரத்து 55 பேர் வாக்களிக்கின்றனர். மேலும் 189 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மதியம் 3 மணியளவில் நிறைவடையும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News