உள்ளூர் செய்திகள்
சேலம் மாவட்டத்தில் கரிய கோவிலில் 37 மி.மீ. மழை பதிவானது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
குறிப்பாக கரியகோவில், பெத்தநாயக்கன்பாளையத்தில் நேற்று கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மேலும் வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக கரியகோவிலில் 37 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. பெத்த நாயக்கன் பாளையம் 14, எடப்பாடி, ஏற்காட்டில் தலா 2, சங்ககிரி, மேட்டூரில் தலா 1.2, காடையாம்பட்டி, ஆனை மடுவில் தலா 1, சேலம் 0.5 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 59.9 மி.மீ. மழை பெய்துள்ளது.