ஆன்மிகம்
லட்சுமி நரசிம்மர்

இர்வாடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுமங்கலி பூஜை இன்று நடக்கிறது

Published On 2019-11-12 03:24 GMT   |   Update On 2019-11-12 03:24 GMT
ராய்காட் மாவட்டம் இர்வாடியில் உள்ள கலியுக மங்கள லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சுமங்கலி பூஜை மற்றும் கோமாதா பூஜை, குத்து விளக்கு பூஜை நடக்கிறது.
ராய்காட் மாவட்டம் இர்வாடியில் உள்ள கலியுக மங்கள லட்சுமி நரசிம்மர் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சுமங்கலி பூஜை மற்றும் கோமாதா பூஜை, குத்து விளக்கு பூஜை நடக்கிறது.

இதில் கலியுக மங்கள லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. சுதர்சன மகாயாகமும் நடக்கிறது. இந்த பூஜைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கின்றன. சுமங்கலி பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள் அனைவருக்கும் சேலை, மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு வழங்கப்படுகிறது. பூஜை பொருட்களும் கட்டணமின்றி வழங்கப்படும்.

இந்த தகவலை சுவாமி சீனிவாச ராமானுஜர் தெரிவித்து உள்ளார்.
Tags:    

Similar News