செய்திகள்
தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது
தொழிலாளியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (35). டெக்ஸ்டைல் தொழிலாளியான இவர், செங்குந்தபுரம் பகுதியில் ஒரு கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புகளூர் புரவி பாளையத்தை சேர்ந்த சுந்தர் (23) என்பவர் கார்த்திக்கிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் வழக்குப்பதிந்து, சுந்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.