செய்திகள்
சசி தரூருடன் விஜய் வசந்த் சந்திப்பு

சசி தரூரை சந்தித்து உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி... விஜய் வசந்த் ட்வீட்

Published On 2021-07-16 15:50 GMT   |   Update On 2021-07-16 17:28 GMT
திருவனந்தபுரம் எம்பியும் முன்னாள் அமைச்சருமான சசிதரூரை கன்னியாகுமாரி எம்பி விஜய் வசந்த் சந்தித்து உரையாடினார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவனந்தபுரம் எம்பியும் முன்னாள் அமைச்சருமான சசிதரூர் சென்னை வந்திருந்தார். அப்பொழுது அங்கு கன்னியாகுமாரி எம்பி விஜய் வசந்த், சசி தரூரை சந்தித்து உரையாடினார். 

இந்த உரையாடலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த விஜய் வசந்த், சசி தரூரை சந்தித்து உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி என்றும் மீண்டும் இதுபோன்ற உரையாடலுக்கான வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். சசிதரூரும் இந்த பதிவை ரீட்வீட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார்.
Tags:    

Similar News