செய்திகள்
திருட்டு

மதுரை அருகே கடையை உடைத்து ரூ.3½ லட்சம் திருட்டு

Published On 2021-04-04 13:11 GMT   |   Update On 2021-04-04 13:11 GMT
மதுரை அருகே கடையை உடைத்து ரூ.3½ லட்சம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை மீனாம்பாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 37). இவர் சிங்கராயர் காலனியில் பத்திர பதிவு அலுவலகம் அருகே தனியாக கடை பிடித்து பத்திரம் எழுதி கொடுத்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலை வந்த போது கடையின் முன்கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News