செய்திகள்
கைது

நாகையில் ஓட்டல் தொழிலாளிகளை கத்தியால் குத்திய 2 வாலிபர்கள் கைது

Published On 2021-04-15 11:07 GMT   |   Update On 2021-04-15 11:07 GMT
நாகையில் ஓட்டல் தொழிலாளிகளிடம் தகராறில் ஈடுபட்டு கத்தியால் குத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை வெளிப்பாளையம் தியேட்டருக்கு முன்பு உள்ள ஓட்டலுக்கு அதே ஊரை சேர்ந்த அருண்குமார் (வயது24), சிவா(23) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வந்து ஓட்டலில் 2 தோசை ஆர்டர் செய்தார்கள்.

சப்ளையர்கள் வேறு ஒரு நபருக்கு தோசை வைத்ததால் ஆத்திரமடைந்த அருண்குமார், சிவா ஆகியோர் வாக்குவாதம் செய்து சப்ளையர்கள் மோகன், பாஸ்கர் ஆகியோரை கத்தியால் குத்தினர். படுகாயமடைந்த 2 பேரும் வெளிப்பாளையம் போலீசில் புகார் அளித்ததின் பேரில் அருண்குமார், சிவா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News