செய்திகள்
விமானத்தில் வந்து இறங்கிய தடுப்பூசி மருந்து

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் இரண்டாவது தொகுப்பு இந்தியா வந்தது

Published On 2021-05-16 04:54 GMT   |   Update On 2021-05-16 04:54 GMT
ஒரு டோஸ் மட்டுமே செலுத்தக்கூடிய இந்தியா-ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக இந்தியாவுக்கான ரஷிய தூதர் கூறினார்.
ஐதராபாத்:

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளுடன் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

இந்தியாவின் அவசர தேவை கருதி உடனடியாக தடுப்பூசி மருந்தை வழங்குவதாக ரஷியா கூறியிருந்தது. அதன்படி முதற்கட்டமாக 1.5 லட்சம் டோஸ் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்துகள் கடந்த 1ம் தேதி ஐதராபாத் வந்தத. இந்நிலையில், இரண்டாம் தொகுப்பு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இன்று ஐதராபாத் வந்தடைந்தது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் சப்ளை செய்வதற்கும், தயாரிப்பதற்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மருந்தை விற்பனைக்கு அறிமுகம் செய்து விலையையும் நிர்ணயித்தது. அதே நாளில் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தும் பணியையும் தொடங்கியது. 



இதுபற்றி இந்தியாவுக்கான ரஷிய தூதர் குடாஷேவ் கூறுகையில், ஸ்புட்னிக்-வி தடுப்பூசியானது ரஷிய-இந்திய தடுப்பூசி என்றும், இந்தியாவில் இந்த தடுப்பூசி உற்பத்தி படிப்படியாக அதிகரித்து, ஆண்டுக்கு 850 மில்லியன் டோஸ் வரை அதிகரிக்கும் என்றும் கூறினார். 

ஒரு டோஸ் மட்டுமே செலுத்தக்கூடிய இந்தியா-ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
Tags:    

Similar News