செய்திகள்
மணி பர்ஸ்

பேரளத்தில் பர்சை திருடிய முதியவர் கைது

Published On 2019-10-18 16:57 GMT   |   Update On 2019-10-18 16:57 GMT
பேரளத்தில் பெண்ணிடம் மணி பர்சை திருடிய முதியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருவாரூர்:

பேரளம் அருகே உள்ள திருமீஞ்சூரை சேர்ந்தவர் சதீஸ். இவரது மனைவி ஜெயா (வயது 29). இவர்கள் நேற்று பேரளம் பஸ் நிறுத்தத்தில் கும்பகோணம் செல்வதற்காக காத்திருந்தனர்.

பின்னர் பஸ் வந்ததும் ஜெயா அதில் ஏறினார். அப்போது அருகில் நின்ற ஒருவர் அவர் வைத்திருந்த மணிபர்சை திருடி உள்ளார். இதனை பார்த்துவிட்ட ஜெயா திருடன் என்று சத்தம் போட்டார். அப்போது அங்கு நின்றிருந்த பொதுமக்கள் மணிபர்சை திருடிய நபரை விரட்டி பிடித்தனர்.

விசாரணையில் அவர் மயிலாடுதுறையை சேர்ந்த சேகர் (53) என்பது தெரியவந்தது. அவரை பொதுமக்கள் பேரளம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News