செய்திகள்
உவரி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனை பகுதியில் நேற்று போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் 3 வாலிபர்கள் சந்தேகப்படும்படி நின்றனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது, அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
உடனடியாக போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அங்கு நின்ற கூட்டபனையைச் சேர்ந்த சகாய ஜெபராஜ் (18), ஜோசப் டேனியல் (20), சகாய அபிஷேக் (20) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.