செய்திகள்
கைது

சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது

Published On 2020-10-21 08:21 GMT   |   Update On 2020-10-21 08:21 GMT
சாராயம் விற்ற பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகை வெளிப்பாளையத்தை சேர்ந்த முத்துலெட்சுமி (வயது42), காக்கழனி காலனி தெருவை சேர்ந்த சாந்தி (43), ராதாமங்கலம் எறும்புகன்னி பகுதியை சேர்ந்த முருகையன் மகன் தமிழ்குடிமகன் (28) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News