செய்திகள்
வழக்கு பதிவு

மருத்துவ சிகிச்சை அளித்த போலி டாக்டர் மீது வழக்குப்பதிவு

Published On 2020-08-15 07:00 GMT   |   Update On 2020-08-15 07:00 GMT
மருத்துவ சிகிச்சை அளித்த போலி டாக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரி மதிகோன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 40). இவர் டாக்டருக்கு படிக்காமலேயே ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பதாக மருத்துவத்துறையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் போலி டாக்டராக செயல்பட்டு மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மதிகோன்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News