செய்திகள்
தாக்குதல்

ஆண்டிப்பட்டி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த வாலிபருக்கு அடி-உதை

Published On 2019-10-15 12:03 GMT   |   Update On 2019-10-15 12:03 GMT
ஆண்டிப்பட்டி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்த வாலிபருக்கு அடி- உதை விழுந்தது.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள முருக்கோடையை சேர்ந்த மச்சக்காளை மகன் செல்லப்பாண்டி (வயது30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த போதைராஜா மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது.

இதனை போதை ராஜா பலமுறை கண்டித்தும் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் சம்பவத்தன்று போதைராஜா, அவரது தம்பி சேகர் ஆகியோர் செல்லப்பாண்டி வீட்டிற்குள் புகுந்து அவரை கடுமையாக தாக்கினர். மேலும் வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இதில் படுகாயம் அடைந்த செல்லப்பாண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து வருசநாடு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் போதை ராஜாவை கைது செய்தனர். சேகரை தேடி வருகின்றனர். மேலும் போதை ராஜா தரப்பில் அளித்த புகார் மனுவில் தன்னையும் தனது தம்பியையும் செல்லப்பாண்டி மற்றும் கோசலை, மாரியம்மாள் ஆகியோர் தாக்கியதாக புகார் அளித்தார். அதன்பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News