செய்திகள்
சாந்தி

அதிகாரிகளிடம் வாதாடி வாக்குரிமை பெற்ற பெண்

Published On 2021-04-06 10:35 GMT   |   Update On 2021-04-06 10:35 GMT
சேலத்தில் தபால் ஓட்டு போடப்பட்டதாக கூறியதால் அதிகாரிகளிடம் வாதாடி பெண் வாக்குரிமை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:

சேலம் டவுன் சோமு தெருவை சேர்ந்தவர் சாந்தி (வயது 55). இவர் முள்ளுவாடி கேட் அருகே உள்ள கோகுல நாதா பள்ளியில் இன்று தனது வாக்கை பதிவு செய்ய வந்தார்.

அப்போது அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் உங்கள் ஓட்டை தபால் ஓட்டில் போட்டு விட்டதாக கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி நான் தபால் ஓட்டு போடவில்லை என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதையடுத்து அங்கு வாக்களிக்க வரிசையில் காத்து நின்றவர்களும் சாந்திக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து மண்டல தேர்தல் அதிகாரிகளுக்கு ஓட்டு சாவடி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் பரிசீலித்த பின்னர் சாந்தியை ஓட்டு போட அனுமதித்தனர். பின்னர் சாந்தி ஓட்டு போட அனுமதிக்கப்பட்டது. அதிகாரிகளிடம் வாதாடி வாக்குரிமையை பெற்ற சாந்தி ஓட்டு போட்டு விட்டு சென்றார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News