செய்திகள்
ராணிப்பேட்டையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை:
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வேலூர் கோட்ட பொறியாளர் எஸ்.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். வாலாஜா உதவி கோட்ட பொறியாளர் ஆர்.பிரகாஷ், உதவி பொறியாளர் டி.ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சாலை பணியாளர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர். அப்போது ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.