செய்திகள்
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு - பொதுமக்கள்அலைக்கழிப்பு
உத்தமபாளையத்தில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் உத்தமபாளையம், தேவாரம், கோம்பை பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், லட்சுமி நாயக்கன்பட்டி, சங்கராபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிகிச்சைக்காக தினமும் 800-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 70-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தினமும் மருத்துவமனையில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் கடந்த சில தினங்களாக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போடுவதற்கு வருகிற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இன்று போய் நாளை வா என்ற பாணியில் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் வந்து சென்றாலும் தடுப்பூசி போட முடியவில்லை. இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் உத்தமபாளையம், தேவாரம், கோம்பை பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், லட்சுமி நாயக்கன்பட்டி, சங்கராபுரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சிகிச்சைக்காக தினமும் 800-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 70-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் தினமும் மருத்துவமனையில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் கடந்த சில தினங்களாக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தடுப்பூசி போடுவதற்கு வருகிற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இன்று போய் நாளை வா என்ற பாணியில் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் வந்து சென்றாலும் தடுப்பூசி போட முடியவில்லை. இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.