செய்திகள்
அரூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி:
அரூர் அருகே உள்ள காவாபட்டியை சேர்ந்தவர் குமரேசன். இவருடைய மனைவி சாந்தகுமாரி (வயது 25). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று சாந்தகுமாரி வீட்டில் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய உறவினர்கள் அரூர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அவருடைய தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக உதவி கலெக்டர் பிரதாப், அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.