ஆன்மிகம்
குழந்தையின் தோஷம் போக்கும் கோமுக சாந்தி

குழந்தையின் தோஷம் போக்கும் கோமுக சாந்தி

Published On 2019-10-18 06:25 GMT   |   Update On 2019-10-18 06:25 GMT
பசுவை வழிபடுவதால் தோஷங்கள் விலகும். குழந்தைக்கு ஏற்படும் தோஷத்தை போக்க கோமுக சாந்தி செய்ய வேண்டிய முறையை அறிந்து கொள்ளலாம்.
பசுவை வழிபடுவதால் தோஷங்கள் விலகும். ரேவதி, ஆயில்யம், கேட்டை ஆகியனவற்றின் 4-ம் பாதத்தின் கடைசி 4 நாழிகைகள், மகம், அசுவினி, மூலம் முதல் பாதத்தின் முதல் இரு நாழிகைகளிலும் பிறந்த குழந்தைகள் தோஷம் உடையவர்களாக இருப்பர்.

இத்தோஷம் விலக, மிகவும் சாதுவான கறவைப் பசுவின் பின் இரு கால்களுக்கு இடைவழியே குழந்தையைக் கொடுத்து மடியை தடவியபடி முன்கால் வழி குழந்தையை எடுத்து முகத்தில் பதியவைத்து எடுக்க வேண்டும்.

இதன் தத்துவம் என்னவெனில் அக்குழந்தையை அந்தப் பசு ஈன்றதாகப் பொருள். இவ்வாறு செய்தால் தோஷம் குழந்தையைப் பாதிக்காது. இதனை கோமுக சாந்தி என்பர்.

எவர் ஒருவருக்குக் குலதெய்வம் தெரியாமல் சிரமப்பட்டுக் கொண்டு குலதெய்வ தோஷத்திற்கும் முன்னோர் கடனுக்கும் ஆளாகி இருக்கிறார்களோ! அவர்கள் வேத அங்க முறைப்படி ஆறு மாத காலம் ஜென்ம நாளில் கோ பூஜை செய்கிறார்களோ அவர்களுக்கு குலம் காக்கும் குலதெய்வம் தெரிந்து தோஷங்களும் அகன்று சுபிட்சமான வாழ்வு உண்டாவது உறுதி. 
Tags:    

Similar News