செய்திகள்
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு 125 பேர் பலி
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,810 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 18,648 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,810 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,648 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 125 பேர் உயிரழந்துள்ளனர்.
கர்நாடகாவில் தற்போது வரை 1,80,835 வரை சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 27,65,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,51,365 பேர் குணமடைந்துள்ளனர். 32,913 பேர் உயிரழந்துள்ளனர்.