செய்திகள்
நகை திருட்டு

பொன்மலைப்பட்டியில் திறந்திருந்த வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

Published On 2020-11-20 05:17 GMT   |   Update On 2020-11-20 05:17 GMT
பொன்மலைப்பட்டியில் திறந்திருந்த வீட்டில் 5 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்மலைப்பட்டி:

திருச்சி பொன்மலைப்பட்டி செங்கோல் உடையார் தெருவை சேர்ந்தவர் ரெங்கராஜ். இவருடைய மனைவி ரேணுகா(வயது 66). இவர் நேற்று மதியம் உடல்நிலை சரியில்லாத ரெங்கராஜை வீட்டில் விட்டுவிட்டு, வாடகை வீடு பார்க்க சென்றார். அப்போது, வீட்டில் கணவர் இருந்ததால் வீட்டை பூட்டாமல் சென்றுவிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் நகைகள் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News