வழிபாடு
லால்குடி அருகே உலகநாயகி அம்மன் கோவில் திருவிழா
லால்குடியை அடுத்த கீழ வாளாடி உலகநாயகி அம்மன் கோவில் திருவிழாவில் இன்று (சனிக்கிழமை) சாமி ஊர்வலம் வந்து குடிபுகுதல் விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது.
லால்குடியை அடுத்த கீழ வாளாடி உலகநாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 16-ந்தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். நேற்று அம்மன் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்தார். தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான எல்லை உடைப்பு நடைபெற்றது.
இன்று (சனிக்கிழமை) சாமி ஊர்வலம் வந்து குடிபுகுதல் விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது. அக்ரகாரம், காவல்கார தெரு, வெள்ளாளர் தெரு, பண்டார தெரு, காமராஜபுரம், புது ரோடு, குடித்தெரு, ஆகிய தெருக்களில் சாமி வீதி உலா வந்து இன்று அதிகாலையில் அம்மன் குடிபுகுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
இன்று (சனிக்கிழமை) சாமி ஊர்வலம் வந்து குடிபுகுதல் விடையாற்றி நிகழ்ச்சி நடக்கிறது. அக்ரகாரம், காவல்கார தெரு, வெள்ளாளர் தெரு, பண்டார தெரு, காமராஜபுரம், புது ரோடு, குடித்தெரு, ஆகிய தெருக்களில் சாமி வீதி உலா வந்து இன்று அதிகாலையில் அம்மன் குடிபுகுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.