செய்திகள்
பிசிசிஐ

மேலும் இரண்டு அணிகள் எவை?: 25-ந்தேதி அறிவிக்கிறது பி.சி.சி.ஐ.

Published On 2021-09-28 20:12 GMT   |   Update On 2021-09-28 20:12 GMT
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க இருக்கும் மேலும் இரண்டு அணிகள் எவை என்பதை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு அடுத்த நாள் அறிவிக்கிறது பி.சி.சி.ஐ.
ஐ.பி.எல். டி20 கிரிக்கெட்டில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 8 அணிகள் என்பதை 10 அணிகளாக அதிகரிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்தது. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் இருந்து 10 அணிகள் விளையாடும் என அறிவித்த பி.சி.சி.ஐ. அணிகளை வாங்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க அழைப்பு விடுத்தது. முதலில் அக்டோபர் 5-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் எனத் தெரிவித்தது. பின்னர் 10-ந்தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 24-ந்தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன. அதற்கு அடுத்த நாள் இரண்டு புதிய அணிகள் எவை? என்பதை பி.சி.சி.ஐ. அறிவிக்கும் என ஐ.பி.எல். நிர்வாகக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அணிகள் அறிவிக்கப்பட்டது. 2023-2027 ஐ.பி.எல். மீடியா உரிமையாக்கான டெண்டர் விடப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News