செய்திகள்
ராமநாதபுரம் அருகே சரக்கு வாகனம் மோதி காவலாளி பலி
ராமநாதபுரம் அருகே சரக்கு வாகனம் மோதி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள முதுனாள் பகுதியை சேர்ந்தவர் நீலமேகம். இவரது மகன் பத்மநாபன் (வயது 52). இவர் கேணிக்கரை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை இவர் தனது மொபட்டில் கேணிக்கரை பகுதியில் ரோட்டை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மினி சரக்கு வாகனம் மோதி படுகாயம் அடைந்தார் உடனடியாக அவர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவிபட்டினம் புறக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் ஜீவரெத்தினம் (38) என்பவரை கைது செய்தனர்.