செய்திகள்
தற்கொலை

வேதாரண்யம் அருகே வாலிபர் தற்கொலை

Published On 2021-09-18 10:18 GMT   |   Update On 2021-09-18 10:18 GMT
வேதாரண்யம் அருகே வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம் செட்டிப்புலம் கிராமம் சிறையின் காடு பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி மகன் உதயவன் (வயது 26).

அவர் அங்குள்ள கடைவீதியில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நடத்தி வந்தார். அடிக்கடி வயிற்று வலியால் கஷ்டப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று இதனால் எலி பேஸ்ட் சாப்பிடுள்ளார். அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உதயவன் இறந்துவிட்டார்.

புகாரின் பேரில் கரியாப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

Similar News