செய்திகள்
கோப்புபடம்

சிவகாசியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2021-09-08 11:19 GMT   |   Update On 2021-09-08 11:19 GMT
சிவகாசி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

சிவகாசி சேனையாபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம் மகன் காளிராஜன் (வயது 26). இவருக்கும் அழகுராசாத்தி என்பவருக்கும் கடந்த 1 வருடத்திற்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அழகுராசாத்திக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. பின்னர் மனைவியின் தாய் வீட்டில் காளிராஜன் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே சென்ற காளிராஜன், சேனையாபுரம் காலனியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது தந்தை செல்வம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News