செய்திகள்
மாமல்லபுரம்

மாமல்லபுரம் பகுதியில் சுற்றிய 4 சீன வாலிபர்களிடம் போலீசார் விசாரணை

Published On 2019-10-11 09:09 GMT   |   Update On 2019-10-11 09:09 GMT
மாமல்லபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 4 சீன வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமல்லபுரம்:

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி மாமல்லபுரம் பகுதி முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய 4 சீன வாலிபர்களை போலீசார் பிடித்தனர். இதில் ஒருவரிடம் பாஸ்போர்ட் இல்லை.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் 4 சீன வாலிபர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News