செய்திகள்
டாஸ்மாக் கடை கொள்ளை

டாஸ்மாக் கடையில் 237 மது பாட்டில்கள் திருட்டு

Published On 2020-11-21 12:38 GMT   |   Update On 2020-11-21 12:38 GMT
அவனியாபுரத்தில் டாஸ்மாக் கடையில் 237 மது பாட்டில்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை அவனியாபுரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. நள்ளிரவில் இந்த கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 240 மதுபாட்டில்களை திருடிச் சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.50 ஆயிரமாகும். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News