செய்திகள்
கோப்புபடம்

அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த தாய்-மகன் கைது

Published On 2021-02-22 14:01 GMT   |   Update On 2021-02-22 14:01 GMT
விருதுநகர் அருகே அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த தாய்-மகனை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரம் புதுக்காலனியைச் சேர்ந்தவர் குருவுத்தாய் (வயது 48). இவரது மகன் செல்வகணேஷ் (25). இவர்கள் இருவரும் வீட்டின் முன்பு அனுமதி இல்லாமல் 3 கிலோ அணுகுண்டு பட்டாசினை உதிரியாக வைத்திருந்தனர். 

அப்பகுதியில் ரோந்து சென்ற ஆமத்தூர் போலீசார் பட்டாசை பறிமுதல் செய்ததுடன் குருவுத்தாய், செல்வகணேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
Tags:    

Similar News