உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் போக்சோவில் கைது

Published On 2022-01-29 07:11 GMT   |   Update On 2022-01-29 09:20 GMT
போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்தனர்.
தாராபுரம்:

தாராபுரத்தை அடுத்துள்ள சிக்கினாபுரம் தண்ணீர்ப்பந்தல் பகுதியில் வசித்து வருபவர் பூபதி (வயது 24). மெக்கானிக் வேலை செய்து வரும் இவர் தனது உறவுக்கார பெண்ணான அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வரும் மாணவியுடன் ஆசைவார்த்தை கூறி பழகி வந்துள்ளார்.  

மேலும் திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்தனர். 
Tags:    

Similar News