செய்திகள்
ராமதாஸ்

இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2020-10-28 04:33 GMT   |   Update On 2020-10-28 04:33 GMT
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 3 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 600-க்கும் கூடுதலான படகுகளில் வங்ககடலுக்கு சென்று கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். 5 ரோந்து படகுகளில் அங்கு வந்த சிங்கள கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசி கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இந்த தாக்குதலில் 2 மீனவர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர்.

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளன. தமிழக மீனவர்கள் மீதான சிங்கள படையினரின் தாக்குதல்களை இனியும் மத்திய, மாநில அரசுகள் சகித்துக்கொண்டிருக்கக் கூடாது. தமிழக மீனவர்கள் மீது கடந்த காலங்களில் சிங்கள படையினர் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

அதுமட்டுமின்றி, டெல்லியில் உள்ள இலங்கை தூதரை அழைத்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News