ஆன்மிகம்
திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பக்தர்களுக்கான கோபூஜை தொடக்கம்

திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பக்தர்களுக்கான கோபூஜை தொடக்கம்

Published On 2021-09-23 07:46 GMT   |   Update On 2021-09-23 07:46 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், கபிலதீர்த்தம் கபிலேஸ்வரசாமி ஆகியவற்றில் நேற்று முதல் கோபூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் அனைத்துக் கோவில்களில் நடத்தப்படும் கோபூஜையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும், என தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி உத்தரவிட்டார்.

அதன்படி தேவஸ்தான கோவில்களான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில், கபிலதீர்த்தம் கபிலேஸ்வரசாமி ஆகியவற்றில் நேற்று முதல் கோபூஜையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக துணை அதிகாரி ரமணபிரசாத், கோ சாலை அதிகாரிகள் அந்தந்த கோவில்களுக்கு உரிய பசு, கன்றுகளை கொண்டு வந்து ஒப்படைத்தனர்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் துணை அதிகாரி கஸ்தூரிபாய், சீனிவாசமங்காபுரம் கோவிலில் துணை அதிகாரி சாந்தி, கோவிந்தராஜசாமி கோவிலில் துணை அதிகாரி ராஜேந்திரடு, கபிலதீர்த்தம் கோவிலில் துணை அதிகாரி சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் கோபூஜை நடந்தது. அதில் கொரோனா விதிமுறையை பின்பற்றி பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News