செய்திகள்
பூதப்பாண்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
பூதப்பாண்டி அருகே பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே உள்ள பால்குளம் பகுதியை சேர்ந்தவர் அதீஷ் (வயது19). நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசித்து வந்த அவருக்கு, கடுக்கரை பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அதனை பயன்படுத்தி அந்த மாணவியுடன் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவர் மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது தாயிடம் கூறியிருக்கிறார். அவர் அதுபற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி விசாரணை நடத்தி வாலிபர் அதீசை கைது செய்தார். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
பூதப்பாண்டி அருகே உள்ள பால்குளம் பகுதியை சேர்ந்தவர் அதீஷ் (வயது19). நாகர்கோவில் பார்வதிபுரத்தில் வசித்து வந்த அவருக்கு, கடுக்கரை பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அதனை பயன்படுத்தி அந்த மாணவியுடன் அடிக்கடி செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவர் மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது தாயிடம் கூறியிருக்கிறார். அவர் அதுபற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்மணி விசாரணை நடத்தி வாலிபர் அதீசை கைது செய்தார். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.
தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.