செய்திகள்
குடியாத்தத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய 2 பேர் கைது
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பொதுமக்களிடம் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்தி வந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குடியாத்தம் அடுத்த கருணீகசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரோஷன்பாபு (வயது 34), ஹேமந்த் (வயது 19) என தெரியவந்தது. இருவரும் லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது.
பொதுமக்களை மிரட்டிய ரோஷன்பாபு மற்றும் ஹேமந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பொதுமக்களிடம் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்தி வந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குடியாத்தம் அடுத்த கருணீகசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரோஷன்பாபு (வயது 34), ஹேமந்த் (வயது 19) என தெரியவந்தது. இருவரும் லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது.
பொதுமக்களை மிரட்டிய ரோஷன்பாபு மற்றும் ஹேமந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.